நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மீண்டுவர, மக்கள் என்டிஏ கூட்டணிக்கு கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், ஜனநாயகக் கடமையாற்ற வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும் எனவும் கூறினார். மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க பேருந்துகள் போதிய எண்ணிக்கையில் இயக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
அனைவரையும் வாக்களிப்பதற்கான வழிவகைகளை தேர்தல் ஆணையமும், அரசும் எடுக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் தனது பணிகளை சிறப்பாக செய்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், கரூரில் தங்கக் காசுகள் விநியோகிக்கப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.
















