தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இதுவரை இல்லாத அளவில் இந்த தேர்தலில் 85.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுகிகளிலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தபோதிலும், வாக்குச்சாவடியில் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு அதிகாரிகள் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதித்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, EVM இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இத்தேர்தலில் 85.13 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
















