வேங்கைவயல் விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக்கூறி, அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டியில் 2022ம் ஆண்டு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், அதே கிராமத்தை சேர்ந்த 3 நபர்கள்தான் இந்த குற்றத்தை செய்ததாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் இதனை ஏற்க மறுத்த நிலையில், தங்களுக்கு முறையான நீதி வழங்கப்படவில்லை எனக்கூறி சட்டமன்ற தேர்தலை புறக்கணித்தனர். மேலும், கிராமத்தின் நுழைவாயிலில் கறுப்புக்கொடி ஏற்றி, தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
















