வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
May 1, 2026, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 1, 2026, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம், மற்றும் தேரோட்டம் நடந்த நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட அழகர், அதிகாலை பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். வெள்ளிக்குதிரை வாகனத்தில், அவரை வீரராகவ பெருமாள் வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர்.

ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், மீண்டும் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். வழிநெடுகிலும், கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் பக்தர்கள், அவரை கண்குளிர தரிசனம் செய்தனர்.

Tags: Madurai Chithirai festival.Kallazhagarvaigai riverMadurai Meenakshi Amman Temple
ShareTweetSendShare
Previous Post

சித்ரா பௌர்ணமி கோலாகலம் – திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இன்றைய தங்கம் விலை!

சித்ரா பௌர்ணமி கோலாகலம் – திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பால் கனகராஜ் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அனைத்து கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – பியூஸ் கோயல்

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அர்சனா பட்நாயக் ஆலோசனை!

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies