தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் வழங்கிய நிலையில், நாளை தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி ஆளும் திமுக அரசை வீழ்த்தியது. இந்த நிலையில் தவெக ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் பெரும்பான்மைக்கு தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன.
பின்னர், நீண்ட இழுபறிக்கு பின்னர், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதன் மூலம் விஜய் ஆட்சி அமைக்க 120 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை கிடைத்தது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்ததால் ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்தார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழவில் தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மே 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு உத்தரவிட்டுள்ளார். நீண்ட இழுபறிக்கு பின்னர், தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்தது.
அதன்படி, ஆளுநர் அர்லேகரின் ஒப்புதலின் பேரில் தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் விழாவில் முதலமைச்சராக பதவியேற்கிறார். இருப்பினும், வரும் 13ஆம் தேதிக்குள் தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஆணையிட்டுள்ளார்.
















