தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் காலை 10:00 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் முறைப்படி பதவியேற்றுக்கொள்கின்றனர்.
சிறப்புமிக்க நிகழ்வைக் கண்டு களிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட நகரின் முக்கியமான 20 இடங்களில் மெகா எல்.இ.டி மின்னணுத் தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
















