ஜோசப் விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தவெகவினர் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்ற பெற்று, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. இந்தநிலையில், சென்னை மக்கள் மாளிகைக்கு சென்று தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில், தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்கிறார்.
இதையொட்டி, சென்னை பனையூர் அலுவலகம் முன்பு தவெக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். மேலும், நெல்லை, மதுரை, திருச்சி , சேலம், ஈரோடு, கரூர் உட்பட தமிழகம் முழுவதும் ஆட்டம், பாட்டத்துடன் பட்டாசுகள் வெடித்து தவெகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
















