தமிழ் மக்களுக்காக தேவையான அனைத்து திட்டங்களையும் செய்’ என்று முதல்-அமைச்சராகும் விஜய்க்கு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரை கூறியுள்ளார்.
விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம், விஜய் இன்று தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
விஜய் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். விஜய்க்கு தாம் சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
















