அதிமுக நிர்வாகிகளை நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செல்லாது - எஸ். பி.வேலுமணி
Jul 19, 2026, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக நிர்வாகிகளை நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செல்லாது – எஸ். பி.வேலுமணி

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2026, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அவர்களது பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை செல்லாது என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கட்டி எழுப்பப்பட்ட அதிமுக என்ற எஃகு கோட்டை சிலரின் தனிப்பட்ட சுய லாபத்திற்காக அசைத்து பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை ஆராய அவசர பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும், முக்கியமாக திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதால் பொதுச்செயலாளருடன் கருத்து வேறுபாடு தொடங்கியதாகவும் கூறியுள்ளனர்.

தம்மிடம் 17 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறி தற்காலிக சபாநாயகரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளித்தன் விளைவாக பிளவு ஏற்பட்டது எனக்கூறியுள்ள அவர்கள், 30 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தரப்பு ஆதரவுக் கடிதத்தை தற்காலிக சபாநாயகரிடம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்து வேறுபாட்டுக்கு அச்சாரம் போட்டது எடப்பாடி பழனிசாமி என்றும், கட்சிக்காக அரும்பாடுப்பட்ட 28 பேரை ஒரே கையெழுத்தில் நீக்கி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை செல்லாது எனவும் கூறியுள்ளனர்.

தேர்தல் ஆணைய சட்டப்படியும், நீதிமன்ற சட்டப்படியும் அசாதாரண சூழலில் ஒருவரை நீக்கவோ அல்லது சேர்க்கவோ இரு பிரிவினருக்கும் அதிகாரம்
கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 28 பேரும் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளனர்.
இதனிடையே, எக்ஸ் பக்கத்தில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் உண்மையை அறியாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை எனக்கூறியுள்ள அவர், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் இபிஎஸ் தன்னிச்சையாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தோல்வி வந்த பிறகு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மக்கள் ஆதரவு பெற்ற தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு ஆதரவை வழங்கியதாக கூறியுள்ள அவர்,
யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கட்சியை பிரிக்கும் எண்ணமோ யாருக்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அழைத்தால் பேச தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். தோல்விக்கான காரணங்களை அனைவரும் சேர்ந்து ஆராய்வோம் என்றும், அதிமுகவின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம் எனவும் கூறியுள்ளார்.

Tags: AIADMK general secretary Edappadi PalaniswamiNatham Viswanathansp velumani
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவின் இரு அணிகளும் பலத்தை அதிகரிக்க முயற்சி – பேரத்தை உயர்த்தி வரும் எம்எல்ஏக்கள்!

Next Post

குதிரைப்பேர அரசியல் இல்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

Related News

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies