அதிமுக நிர்வாகிகளை நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செல்லாது - எஸ். பி.வேலுமணி
Sep 2, 2026, 03:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக நிர்வாகிகளை நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செல்லாது – எஸ். பி.வேலுமணி

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2026, 01:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அவர்களது பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை செல்லாது என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கட்டி எழுப்பப்பட்ட அதிமுக என்ற எஃகு கோட்டை சிலரின் தனிப்பட்ட சுய லாபத்திற்காக அசைத்து பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை ஆராய அவசர பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும், முக்கியமாக திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதால் பொதுச்செயலாளருடன் கருத்து வேறுபாடு தொடங்கியதாகவும் கூறியுள்ளனர்.

தம்மிடம் 17 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறி தற்காலிக சபாநாயகரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளித்தன் விளைவாக பிளவு ஏற்பட்டது எனக்கூறியுள்ள அவர்கள், 30 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தரப்பு ஆதரவுக் கடிதத்தை தற்காலிக சபாநாயகரிடம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்து வேறுபாட்டுக்கு அச்சாரம் போட்டது எடப்பாடி பழனிசாமி என்றும், கட்சிக்காக அரும்பாடுப்பட்ட 28 பேரை ஒரே கையெழுத்தில் நீக்கி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை செல்லாது எனவும் கூறியுள்ளனர்.

தேர்தல் ஆணைய சட்டப்படியும், நீதிமன்ற சட்டப்படியும் அசாதாரண சூழலில் ஒருவரை நீக்கவோ அல்லது சேர்க்கவோ இரு பிரிவினருக்கும் அதிகாரம்
கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 28 பேரும் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளனர்.
இதனிடையே, எக்ஸ் பக்கத்தில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் உண்மையை அறியாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை எனக்கூறியுள்ள அவர், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் இபிஎஸ் தன்னிச்சையாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தோல்வி வந்த பிறகு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மக்கள் ஆதரவு பெற்ற தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு ஆதரவை வழங்கியதாக கூறியுள்ள அவர்,
யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கட்சியை பிரிக்கும் எண்ணமோ யாருக்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அழைத்தால் பேச தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். தோல்விக்கான காரணங்களை அனைவரும் சேர்ந்து ஆராய்வோம் என்றும், அதிமுகவின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம் எனவும் கூறியுள்ளார்.

Tags: AIADMK general secretary Edappadi PalaniswamiNatham Viswanathansp velumani
Share
Tweet
SendShare
Previous Post

அதிமுகவின் இரு அணிகளும் பலத்தை அதிகரிக்க முயற்சி – பேரத்தை உயர்த்தி வரும் எம்எல்ஏக்கள்!

Next Post

குதிரைப்பேர அரசியல் இல்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies