திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றதால், வரும் உள்ளாட்சித் தேர்தலை தனித்து எதிர்கொள்ள திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராக வேண்டுமென கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய திமுக மூத்த நிர்வாகிகள், திமுக தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் அதன் பலத்தைப் பரிசோதித்து பார்க்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை திமுக தனித்து எதிர்கொள்வதன் மூலம் 2029-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையும் தனியாகவே சந்திக்க முடியும் என திமுக தலைமை கருதுகிறது.
















