டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகத்தின் நலன்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினார்.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசுமுறை பயணமாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். பின்னர் அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டார்.
மாலையில் டெல்லி சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடியை, முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்தின் பல்வேறு நலன்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தார். முதல்வராக பதவியேற்ற பின்னர், பிரதமரை சந்திப்பது என்பது மரபாகும். அதன்படி இந்த சந்திப்பானது நிகழ்ந்திருக்கிறது.
முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு கோவையில் நிகழ்ந்த சந்திப்புக்கு பின், பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜோசப் விஜய் மீண்டும் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் இருவரது சந்திப்பு குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கும் விஜய், இருநாள் அரசுமுறைப் பயணத்தை முடித்து இன்றைய தினமே தமிழகம் திரும்பவுள்ளார்.
















