திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி, அமைச்சர் நிர்மல்குமாரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மதுரை திருநகர் பாண்டியன் நகரில் தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் மருது தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டார்.
அப்போது, திருப்பரங்குன்றம் மலைமீது உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி தீபம் ஏற்ற வேண்டும், ஆக்கிரமிப்பு செய்த இடங்களை மீட்க வேண்டும் என அமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து, மனுவை பெற்று கொண்ட அமைச்சர் நிர்மல்குமார் பதில் கூறாமல் சென்றுவிட்டார்.
















