மக்களின் உணர்வுகளை மதிக்காததால் தான் திமுக ஆட்சி முடிவுக்கு வந்ததாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்புக்கு பிறகும் மலை உச்சியில் தீபம் ஏற்ற விடமாட்டோம் என கூறுவது ஆணவத்தின் உச்சம் என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு செய்த தவறையே தவெக அரசும் செய்கிறது என்றும், பொதுமக்களின் உணர்வுகளை மத உணர்வு என கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே ஹிந்துக்களின் ஒரே இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்,
















