தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆறு முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்…
தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.5.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும், தனிநபர்களுக்கான கடன் சுமை 1 லட்சத்து 28 ஆயிரத்து 934 ரூபாயாக உள்ளது என்றும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26-ல் வட்டிச் செலவு 67 ஆயிரத்து 50 கோடியாக உயர்ந்து, மூலதனச் செலவான 50 ஆயிரத்து 911 கோடியைவிட அதிகமாகியுள்ளது.
2025-26-ல் வருவாய்ப் பற்றாக்குறை 78 ஆயிரத்து 324 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் 2013-14-க்கு பிறகு தமிழகம் வருவாய் உபரியை எட்டவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய்-ஜி-எஸ்.டி.பி. விகிதம் 5.4 சதவீதம் மட்டுமே என்றும் இது பல முன்னணி மாநிலங்களை விட குறைவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடிக் கடன், மின் வாரியக் கடன், உத்தரவாதக் கடன் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து மாநிலத்தின் மொத்த நிதிச்சுமை 13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
















