புதுச்சேரி அமைச்சரவையில் மேலும் 3 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர்.
புதுச்சேரி அமைச்சரவையின் விரிவாக்கத்தையொட்டி, புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா பழைய மக்கள் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ராஜவேலு, சிவக்கொழுந்து, ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டார்.
புதிய அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
















