மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவியா? தவெக.தொண்டர்கள் அதிருப்தி - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவியா? தவெக.தொண்டர்கள் அதிருப்தி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெகவில் புதியதாக இணையும் மாற்றுக்கட்சியினருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏற்கனவே உள்ள நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசல் தவெகவை நம்பி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக கட்சியில் இணைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய போதே எழுந்த எதிர்ப்புக் குரல் தற்போது அதிமுகவினர் இணையும் போது வலுக்கத் தொடங்கியுள்ளது.

மாற்றுக் கட்சியில் இருந்து வந்த 106 பேருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால் தவெகவைச் சேர்ந்த 62 மாவட்டச் செயலாளர்கள் உட்பட விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து உழைத்தவர்களுக்கு வாய்ப்பில்லாத சூழல் நிலவியது. அதோடு தேர்தலில் வெற்றி பெற்றபின் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களில் 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதும் தவெகவுக்குள்ளான உட்கட்சி பூசலை வலுப்படுத்த, தற்போது அதிமுகவில் இருந்து சாரை சாரையாக வரும் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெரிய பூதாகரத்தை உண்டாக்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிடாதவர்கள் ஒருபுறமும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அமைச்சர் பதவி கேட்டு மறுபுறமும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நான்கு MLA-க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. மீண்டும் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை நம்பி வந்த இந்த நான்கு பேரும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

விஜய் ரசிகர் மன்ற காலத்திலிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து படிப்படியாக உழைத்து வரும் நிர்வாகிகளுக்கு மதிப்பளிக்காமல் மாற்றுக் கட்சியினருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு வெளிப்படையாகவே சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். புதியதாக வந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் இப்பிரச்னை மேலும் கொழுந்து விட்டு எரியும் என்ற தகவலும் கட்சித் தலைமைக்கு சென்றுள்ளது. எனவே புதியதாக வந்தவர்களை சிறிது காலம் ஓரங்கட்டி வைத்துவிட்டு பழைய நிர்வாகிகளை அனுசரித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முடிவுக்கு தவெக தலைமை முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: tvkAnandtamilga vetri kalagamjoining TVK from other partiestvk cadresDMKVijayaiadmk
ShareTweetSendShare
Previous Post

காவிரி – கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – அன்புமணி வேண்டுகோள்!

Next Post

லெப்பாய் பிரிவில் சான்றிதழ் வழங்க முடியாது; நீதிமன்றம் உத்தரவு

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies