கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில், ஊழல்கள் மற்றும் திட்டமிட்ட விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அரசு டெண்டர்களை பெற்றுத் தருவதாகக் கூறி, ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள், தன்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்புத் துறையிடமோ புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்கு தேவையான சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறுதியளித்துள்ளார்.
















