ராமேஸ்வரத்தில் கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கான வழிபாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
கிராம கோயில் அர்ச்சகர்களின் பேரவை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில் அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த முகாம் 15 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சிக்கு பின் பேசிய ஆர்.ஆர்.கோபால்ஜி, சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறியதாலேயே திமுகவின் ஆட்சி கவிழ்ந்ததாக தெரிவித்தார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரம், சனாதன தர்மம் உள்ளிட்டவற்றை காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
















