திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதனை கண்டித்து பாரதிய ஹிந்து எழுச்சி இயக்க தலைவர் மேகராஜ் பாண்டியன் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று அமைச்சர் நிர்மல்குமாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
















