அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் திமுகவைச் சார்ந்த 59 உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என அறிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் பொதுவாக அனைவருக்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், தவெக உறுப்பினர்களில் கார் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். ரேஞ்ச் ரோவர் காரில் வந்துவிட்டு, தங்களிடம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பதாகக் கூறவில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவருக்கு 3 வீடுகள் இருந்தும் அரசு பங்களாவில் வசிப்பதாகவும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் அந்தஸ்தில் இருப்பதால் அரசு பங்களாவில் வசிப்பது அவரது உரிமை என்றும், கார் வழங்குவதால் கூடுதல் செலவு ஏற்படும் என்பதற்காக, அவரிடம் 3, 4 வீடுகள் இருப்பதாக விமர்சிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என கூறுவதில் என்ன அரசியல் இருக்கிறது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சருக்கு இணையானவர் என்பதால், அவருக்கு அரசு வழங்கிய பங்களாவை விமர்சிப்பது என்ன அர்த்தம் என்றும் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய சிபிஐ உறுப்பினர் ராமச்சந்திரன், கார் தேவையில்லை என்பதுதான் தங்களது நிலைப்பாடு என திட்டவட்டமாக தெரிவித்தார்.
















