டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக இம்முறை பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. முன்னணி மருத்துவமனைகளில் தினமும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் பலர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில், நேற்று ஒரே நாளில் மட்டும் ஒட்டு மொத்தமாக 159 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 114 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது பரிசோதனைகள் வழியாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
















