அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு மற்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறும் சரக்கு கப்பல்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், கப்பல்கள் சிறைபிடிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு பிற நாடுகள் ஆதரவு அளித்தால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம் என ஈரான் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை செயலர் ரெஷாய் தெரிவித்துள்ளார்.
















