தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட்டுகள், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சொந்த ஊர் செல்ல லட்சக்கணக்கான மக்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக, நவம்பர் 5ம் தேதி பயணிக்க இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
அதற்கு அடுத்த நாளான நவம்பர் 6ம் தேதி பயணத்திற்கு நாளையும், நவம்பர் 7ம் தேதி பயணத்திற்கு நாளை மறுநாளும், தீபாவளி நாளான நவம்பர் 8ம் தேதி பயணிக்க வரும் 9ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.
இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் பலருக்கு இணையதளம் முடங்கியது. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
















