உக்ரைன் போரில் நிலைப்பாடு என்ன? : உண்மையின் பக்கமே இந்தியா - பிரதமர் மோடி உறுதி!
Mar 15, 2026, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைன் போரில் நிலைப்பாடு என்ன? : உண்மையின் பக்கமே இந்தியா – பிரதமர் மோடி உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, உக்ரைன் போரில் நடுநிலை வகிக்காமல் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

23வது இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டுக்காக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது.

அதன் பிறகு,டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் அதிபர் புதினும் அதிகாரப்பூர்வ இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், பிரதமரின் அழைப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டதாகவும் அமைதியான தீர்வுக்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பதில் அதிக கவனம் செலுத்தும் பிரதமர் மோடிக்கு மீண்டும் நன்றி தெரிவித்த அதிபர் புதின், வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ள இந்திய- ரஷ்ய உறவு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுகளில், இந்திய- ரஷ்ய உறவை வளர்ப்பதற்குப் பிரதமர் மோடி, பெரும் பணிகளைச் செய்துள்ளதாக கூறிய அதிபர் புதின், உயர் தொழில்நுட்பம் சார்ந்த விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட கூடுதல் துறைகளில் இந்தியாவுடனே ஒத்துழைப்பை ரஷ்யா வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

உலகின் நலன் அமைதிப் பாதையின் மூலமே உருவாகும் என்றும், ஒன்றாக அமைதிக்கான வழிகளைத் தேட வேண்டும் என்றும், தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகளால், மீண்டும் ஒருமுறை உலகம் அமைதிக்குத் திரும்பும் என்று நம்புவதாகவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிட் முதல் இன்றுவரை, உலகம் பல நெருக்கடிகளைக் கடந்து வந்துள்ளதாகவும், மிக விரைவில் உலகம் ஒரு புதிய நம்பிக்கையைப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தலைவர்களுடன் உக்ரைன் போர் குறித்து விரிவாக விவாதித்த போதெல்லாம், இந்தியா நடுநிலையாக இல்லை என்றும் உண்மையின் பக்கமே நிற்கிறது என்றும் எப்போதும் கூறி வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் தெளிவான இந்த நிலைப்பாடு அமைதிக்கானது என்றும் அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Tags: Ukraine warIndiarussiaRussian president putinprime minister modi
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?

Next Post

கோவா நைட் கிளப் சிலிண்டர் விபத்து – 23 பேர் பலி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies