ஆப்ரேஷன் சிந்தூர் : 314 கி.மீ தொலைவிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட பாக்., விமானம் : இந்திய விமானப்படையின் திறமையை பாராட்டிய ரஷ்ய ஆய்வாளர்...!
Mar 15, 2026, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்ரேஷன் சிந்தூர் : 314 கி.மீ தொலைவிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட பாக்., விமானம் : இந்திய விமானப்படையின் திறமையை பாராட்டிய ரஷ்ய ஆய்வாளர்…!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையினர் தொலை தூரத்தில் இருந்து, பாகிஸ்தானின் கண்காணிப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என ரஷ்ய ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளனர். உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த செய்தி குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், 25 சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தமாக 26 பேரின் உயிர்களை பலி வாங்கியது. பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பும், The Resistance Front என்ற அதன் கிளை அமைப்பும் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றன.

தொடர்ந்து பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்தது. அதன்படி, கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, இந்தியாவின் பாதுகாப்பு படைகள் சரமாரி தாக்குதல்களை நடத்தின. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் இந்த அதிரடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு மன்றாடியதை தொடர்ந்து, கடந்த மே 10-ம் தேதி ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்தது. இதற்கிடையே ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்திய விமான படையினர் பாகிஸ்தான் ஏவுகணையை, 314 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதாகவும், அப்போது அந்நாட்டின் AWACS கண்காணிப்பு விமானமும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தகவல் வெளியானது.

இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங்கும் இதனை அதிகாரப்பூர்வமாக விளக்கி உறுதிபடுத்தியிருந்தார். குறிப்பாகப் பஞ்சாபில் நிலைநிறுத்தப்பட்டிருந்த விமானப்படையின் S-400 அலகு, 40 டிகிரி வடக்கு 6 டிகிரி கிழக்கு (40N6E) திசையில் ஏவுகணையை ஏவி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டிங்கா பகுதியில் பறந்துகொண்டிருந்த AWACS கண்காணிப்பு விமானத்தைத் தாக்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதனை உண்மை என ஒப்புக்கொண்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு நிபுணர் அலெக்ஸே மிக்காய்லோவ் பெட்ரென்கோ, இந்தத் தாக்குதல் S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் நிரூபிக்கப்பட்ட திறன்களுக்கு முற்றிலும் ஒத்ததாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரின்போதும் இதுபோன்ற தொலைதூர தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், 2022-ல் ரஷ்யா S-300V4 அமைப்பை பயன்படுத்தி 217 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த உக்ரைன் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை நினைவூட்டினார்.

இந்நிலையில், இந்திய விமானப்படை 314 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பாகிஸ்தானின் கண்காணிப்பு விமானத்தைத் தாக்கியது, உலகிலேயே மிக நீண்ட தூர வான்பரப்பு ஏவுகணை தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய விமானப் படையின் இந்தத் தாக்குதல் பாகிஸ்தானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தி, இந்திய போர் விமானங்களுக்கு முக்கிய மூலோபாய முன்னேற்றத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் AWACS கண்காணிப்பு விமானத்தைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட பாகிஸ்தானின் JF-17 போர் விமானங்களும் இலக்காகின. இதனை உண்மையென நிரூபிக்கும் வகையில் சியால்கோட் அருகே 200 கிலோ மீட்டர் தொலைவில், ஒரு JF-17 விமானம் அழிக்கப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்களிலும் செய்தி வெளியாகின.

4 நாட்கள் நீடித்த இந்த ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் S-400 அமைப்பை பயன்படுத்தி மொத்தம் 6 பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதலில் போலாரி விமான தளத்தில் இருந்த மற்றொரு AWACS கண்காணிப்பு விமானமும் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாகவும், அந்நாட்டின் வான்வழி முன்னறிவிப்பு திறன் சுமார் 22 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் பாதுகாப்பு நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்திய விமானப்படையின் துல்லியமும், மூலோபாய திட்டங்களும் பாராட்டத்தக்கது எனப் புகழ்ந்துள்ள ரஷ்ய பாதுகாப்பு நிபுணர் பெட்ரென்கோ, ‘Shoot and Scoot’ யுத்த நுட்பங்கள், குறைந்த ரேடார் அடையாளங்களை திறம்பட பயன்படுத்தி, இந்திய விமானப்படை எதிரியின் எதிர்-ரேடார் ஏவுகணைகளை தவிர்த்துத் தாக்கியதையும் விளக்கியுள்ளார். மேலும், ஆயுதங்களை தயாரிக்கும் தங்களைவிட இந்திய விமனாப்படையினர், அவற்றை திறமையாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய விமானப்படையின் துல்லியமும், மூலோபாய வலிமையும் சர்வதேச அளவில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Tags: today newsopreration sindoorOperation Sindhur: Pakistani plane shot down from a distance of 314 km: Russian analyst praises Indian Air Force's capabilities...!Indiapakistanrussianews
ShareTweetSendShare
Previous Post

செவிலியர்கள் போராட்டம் : திமுக அரசை கண்டித்த அண்ணாமலை!

Next Post

வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது எப்படி? : மது, மாது, கேளிக்கைகளில் இருந்த ராணுவ தளபதிகள் – விசாரணைக்குழு அம்பலம்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies