குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான் மீது அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தி வருவதால் மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பிப்ரவரி 28ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா-ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடிக்கிறது.
இதனிடையே, வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், கெய்ஷ்ம் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. இதனால், மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
















