இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 29, 2026, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிந்து நதியில் தண்ணீர் விநியோகம் தடைபட்டதால் பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. இதற்கு தீர்வு காணுமாறு பாகிஸ்தான் அழைப்பு விடுத்த நிலையில், இனி ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்ததால், பாகிஸ்தான் நிலைகுலைந்து போய்விட்டது… இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதியில் பாகிஸ்தானுக்கான நீர் பங்கீட்டை மத்திய அரசு நிறுத்திவைத்ததால், அந்நாட்டின் விவசாயம் தடைபட்டு பொருளாதார மந்த நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தச் சூழலில் கார்கில் போர் வெற்றி தின விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகளை மேற்கொள்காட்டி, இனி அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றால், அது ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையப்படுத்தியே இருக்கும் என தெளிவாக கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர், இந்தியாவின் ஒன்றுபட்ட காஷ்மீரின் ஒருபகுதி என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்…

((பைட்- ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்- 30 Seconds))

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணைபோகும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு.

இந்தச் சூழலில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு பேசியதால், கதிகலங்கிப் போன பாகிஸ்தான், தங்களுக்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளது.

மேலும், ராஜ்நாத் சிங்கின் பேச்சு ஜம்மு-காஷ்மீர் தொடர்பான உண்மையை சித்தரித்து, பிராந்திய அமைதியை சீர்குலைப்பதாகவும் பாகிஸ்தான் கதற தொடங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், அவரது உரை உண்மையை தவறாக சித்தரித்து, பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து, சிந்துநதி பிரச்னைக்குத் தீர்வுகாண உதவ வேண்டுமென பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கெனவே ஐ.நா.வில் இந்தப் பிரச்னையை பாகிஸ்தான் பலமுறை முன்வைத்த போதிலும், அதற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

கடந்த 1960-ஆம் ஆண்டில் கையொப்பமான சிந்து நதி ஒப்பந்தம் தற்போது காலாவதியாகிவிட்டதாக மத்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது. இதனால், சிந்து நதியில் அணைகட்டும் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டங்கள் மூலம் கூடுதல் நீரைச் சேமித்து ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சிந்து நதியில் தண்ணீர் என்பது பாகிஸ்தானுக்கு கானல் நீராகிவிடும். பயங்கரவாதத்தை ஊக்குவித்து அதை அரசின் கொள்கையாகவே மாற்றிய பாகிஸ்தான், இந்தியாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கால் ஆட்டம் கண்டு போய் நிற்கிறது…

Tags: PahalgamIndus RiverPakistan's economyminister rajnath singhterror attackPakistan-occupied Kashmir
Share
Tweet
SendShare
Previous Post

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

Next Post

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies