முதலமைச்சர் மற்றும் நடிகை குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சையில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக தவெகவினர் தரப்பில் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை போலீசார் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
196 பிஎன்எஸ் பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
192 பிஎன்எஸ் கலவரத்தை தூண்டுதல் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல் 352 பிஎன்எஸ் பிரிவுகளிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
79 பிஎன்எஸ் பெண்ணின் கண்ணியத்திற்கு அல்லது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல் பிரிவிலும்,
296(b) பிஎன்எஸ் பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல் ஆகிய பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
61 பிஎன்எஸ் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து சட்டவிரோத செயலை செய்ய திட்டமிடுதல் பிரிவிலும்,
351 பிஎன்எஸ் ஒருவருக்கு மிரட்டல் விடுவது ஆகிய பிரிவுகளிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் பிரிவு 4 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய 9 பிரிவுகளில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
















