மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது மகன் எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கால்நடைத் துறை அமைச்சராக இருந்த பி.எம்.செங்குட்டுவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது
லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் பதியப்பட்ட இந்த வழக்கில் செங்குட்டுவன் மற்றும் அவரது மகன்கள் எஸ்.பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் செங்குட்டுவன் உயிரிழந்துவிட்டதால் அவர் மீதான வழக்கை ரத்து செய்ததுடன்
மகன்கள் மற்றும் மகள் மீதான வழக்கை தொடர்ந்து விசாரித்தது, அப்போது குற்றம் உறுதி செய்யப்பட்டதாக கூறி 4 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன்
செங்குட்டுவனின் மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல் மற்றும் மகள் மீனாட்சி உள்ளிட்ட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
















