நாட்டின் 80வது சுதந்திர தினத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் ISI ஆதரவு பெற்ற ஷெசாத் பட்டி நெட்வொர்க்கைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரதமர் மோடியின் தலைமையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக zero-tolerance கொள்கையை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நடத்தப்பட்ட அதிரடி தடுப்பு நடவடிக்கைகளில் SBN என்ற ஷெசாத் பட்டி நெட்வொர்க்கைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷெசாத் பட்டி நெட்வொர்க்’ என்பது பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட, பாகிஸ்தான் உளவுத் துறையான ISI யின் ஆதரவுடன் செயல்படும் ஒரு பயங்கரவாதக் குழுவாகும்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹாவல் நகரின் ‘கிறிஸ்டியன் குவாட்டர்’ பகுதியைச் சேர்ந்த Shehzad Bhatti ஒரு பாகிஸ்தான் கேங்ஸ்டர்.
பஞ்சாபின் ராவல்பிண்டியில் ஃபருக் கோக்கரின் (Farrukh Khokhar) குற்றக் கும்பலுடன் இணைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்தார் Shehzad Bhatti. பாகிஸ்தான் காவல்துறையால் தேடப்பட்ட Bhatti 2015-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தப்பிச் சென்றார்.
பிறகு இந்தியாவிற்கு எதிராக – குறிப்பாக எல்லை மாநிலங்களில் – குறைந்த செலவிலான, சிறிய அளவிலான போரைத் தொடர்ந்து நடத்துவதற்கு ISI -க்கு கைக்கூலியாக Shehzad Bhatti தன்னை மாற்றிக்கொண்டார்.
போர்ச்சுகல், மெக்ஸிகோ என தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்ட Bhatti தற்போது பிரேசிலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், போர்ச்சுகலில் இருந்தபோது சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) தன்னைத் தாக்கத் திட்டமிட்டதாகக் கூறி Bhatti வெளியிட்ட காணொளி வைரலானது .
Bhatti-யின் தூண்டுதலின் பேரில் இந்தியாவில் பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கண்டு பிடித்துள்ளன. மேலும் ‘காலிஸ்தான் விடுதலைப் படை’ (Khalistan Liberation Army) ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் ஹிந்துஸ்தான்’ என பல சிறு சிறு பயங்கரவாத குழுக்கள் Bhatti கீழ் செயல்பட்டுவருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
காவல் துறை, பாதுகாப்பு மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைக் கண்காணிக்கவும் (reccé), உளவு பார்ப்பதற்காக CCTV கேமராக்களைப் பொருத்தவும் குறிப்பிட்ட இந்திய மாநிலங்களில் உள்ளூர் நபர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த பயங்கரவாத நெட்வொர்க் பணம் வழங்கி வருகிறது.
நாட்டின் 80 வது சுதந்திர தினத்தில் இடையூறுகள் செய்வதற்காக இந்த பயங்கரவாத நெட்வொர்க்-கால் திட்டமிடப்பட்ட சதிகள் வெற்றிகரமாக முறியடிக்கப் பட்டுள்ளன.
மாநிலக் காவல் படைகளுடன் நிகழ்நேர உளவுத்துறை அளித்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி பல மாநிலங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக 14 மாநிலங்களில் ஷெசாத் பட்டி நெட்வொர்க்-குடன் தொடர்புடைய அனைத்து செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தாக்குதல் சதி திட்டங்கள் முறியடிக்கப் பட்டு இந்த நெட்வொர்க் முற்றிலுமாகச் சிதைக்கப் பட்டுள்ளது.
இந்த வேட்டையில் உத்தரப் பிரதேசத்தில் 62 பேரும் ஹரியானாவில் 52 பேரும், டெல்லியில் 51 பேரும், பஞ்சாப்பில் 44 பேரும் ராஜஸ்தானில் 15 பேரும், மகாராஷ்டிராவில் 8 பேரும், உத்தரகண்ட்டில் 5 பேரும், கர்நாடகா, குஜராத் மற்றும் பீகாரில் தலா 3 பேரும் மற்றும் தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கேரளாவில் தலா 2 பேரும் என 14 மாநிலங்களில் சுமார் 253 பேர் பிடிபட்டுள்ளனர்.
ISI நிதியுதவி பெற்ற improvised explosive devices , பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலை முத்திரைகள் கொண்ட கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட CCTV கேமராக்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. இவை எல்லாம் இந்த பயங்கரவாத குழுவுக்கு ISI உடனான நேரடி தொடர்புகளை உறுதிப்படுத்தியுள்ளன.
UAPA, BNS, ஆயுதச் சட்டம், NDPS சட்டம் மற்றும் வெடிபொருள் பொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த பயங்கரவாத நெட்வொர்க்-க்கு எதிராக 80-க்கும் மேற்பட்ட FIR-கள் பதிவு செய்யப்பட்டு, 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக டெல்லி மற்றும் கர்நாடகாவில் புதிய FIR-கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது எக்ஸ் பக்கத்தில் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, ISI ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவான ஷெசாத் பட்டி நெட்வொர்க்-கை பிரதமர் மோடி அரசு அழித்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மத்திய அரசு சற்றும் சகித்துக்கொள்ளாது என்றும், நாடு முழுவதும் பயங்கரவாத நெட்வொர்க்களைத் தகர்ப்பதற்கான பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாகிஸ்தான் கைக் கூலியான கேங்ஸ்டர் Shehzad Bhattiயின் நெட்வொர்க்கை முற்றிலுமாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தகர்த்துள்ளன.
















