அனைவருக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான குரலாக இந்தியா பேசுகிறது-மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
Sep 13, 2026, 06:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைவருக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான குரலாக இந்தியா பேசுகிறது-மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவின் நலன்களுக்கு செவிசாய்க்க தயாராக இல்லை என்றால் நீங்கள் எல்லாம் என்ன மாதிரியான 'இந்தியா'? மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்கேள்வி .

Sivasubramanian P by Sivasubramanian P
Jul 28, 2023, 04:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய வெளியுறவு கொள்கையின் சமீபத்திய வெற்றிகள் குறித்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று இரு அவைகளிலும் தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்து பேசினார். இந்திய சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டை நாம் செப்டம்பரில் நடத்த உள்ளோம். இந்தியாவின் ஜி20 தலைமைப்பதவி, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை ஊக்குவிப்பதிலும், தற்சார்பு பார்வையை நனவாக்குவதற்கும் ஒரு உந்துசக்தியாக விளங்கி வருகிறது. உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக நம்பகமான மற்றும் பயனுள்ள வளர்ச்சிக்கான பங்காளியாக இந்தியா உருவாகி வருகிறது.

நமது வளர்ச்சிக்கான பங்களிப்பு தற்போது 78 நாடுகளில் பரவியுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் தேைவ அடிப்படை, வெளிப்படை, அதிகாரமளித்தல், சுற்றுச்சூழல் சார்ந்தவை மற்றும் ஆலோசனை அணுகுமுறையை நம்பியுள்ளன வளர்ச்சிக்கான குரல் முன்னெப்போதும் இல்லாத வகையிலும், சிக்கலாகவும் உள்ள இந்தச் சூழலில் மக்களை மையமாகக் கொண்ட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது சமூகத்தின் கோரிக்கைகள் மற்றும் விருப்பங்களால் வழிநடத்தப்படுகிறது. இன்று, இந்தியா பேசினால் அதை உலகம் அங்கீகரிக்கிறது. ஏனெனில் இந்தியா தனக்காக மட்டுமின்றி மேலும் பலருக்காகவும் பேசுகிறது. மேலும் அனைவருக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான குரலாக இந்தியா பேசுகிறது. மாதம் பிரதமர் மோடி மேற்கொண்ட அமெரிக்காவுக்கான அரசுமுறை பயணத்தில் அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் 2-வது முறையாக உரையாற்றும் அரிதான கவுரவம் வழங்கப்பட்டது. உக்ரைனில் கடந்த ஆண்டு தொடங்கிய போரின்போதும், சூடான் கிளர்ச்சியிலும் இந்தியா தனது மக்களை திக்கற்றவர்களாக விட்டு விடவில்லை. ஆபரேஷன் காவேரி, ஆபரேஷன் கங்கா போன்ற மீட்பு நடவடிக்கைகளின்போது இந்திய குடிமக்களை மீட்டது மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் உதவிகளை வழங்கினோம் என்று தெரிவித்தார்.

மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ‘இந்தியா இந்தியா’ தொடர்ந்து கோஷகம் எழுப்பியவண்ணம் இருந்தனர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. அதிருப்தி அடைந்த அமைச்சர் ஜெய்சங்கர், தேச நலன் சார்ந்த விவகாரங்களில் அரசியலை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்தியாவின் நலன்களுக்கு செவிசாய்க்க தயாராக இல்லை என்றால் நீங்கள் எல்லாம் என்ன மாதிரியான ‘இந்தியா’?’ என கேள்வி எழுப்பினார்.

Tags: Jai sankar
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு

Next Post

அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies