எனது 3-வது ஆட்சி காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சூளுரை!
Jul 30, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எனது 3-வது ஆட்சி காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சூளுரை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 10, 2023, 08:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்னுடைய 3-வது ஆட்சிக் காலத்தில், உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பாரதப் பிரதமர் மோடி பேசியதாவது: “நாட்டின் வளர்ச்சி மீது பா.ஜ.க. கவனம் செலுத்தி வருகிறது. இதுதான் இப்போதைக்குத் தேவை. அதோடு, நாங்கள் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஊழல், முறைகேடு, மோசடி இல்லாத இந்தியாவாக மாற்றி இருக்கிறோம். இந்திய இளைஞர்கள் மீது பா.ஜ.க.வுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கிறோம். இந்தியாவில் வறுமை வேகமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. 35 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம். சுத்தமான குடிநீர் கொடுத்து 4 கோடி உயிர்களைக்  காப்பாற்றி இருக்கிறோம். தூய்மை இந்தியா திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் பாராட்டுகிறது. பொதுத்துறை வங்கிகளின் லாபம் 2 மடங்கு உயர்ந்திருக்கிறது. ஹெச்ஏஎல் நிறுவனத்தின் எதிர்காலம் மங்கிவிடும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தன. ஆனால், எதிர்க்கட்சிகளின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி லாபம் ஈட்டியது.

அதேபோல, எல்.ஐ.சி. குறித்தும் எதிர்க்கட்சிகள் சந்தேமடைந்தன. ஆனால், எல்.ஐ.சி. நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளுக்குத் தெரியும் இந்தியாவின் வளர்ச்சி. ஆனால், எதிரில் இருக்கும் எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை. எங்களது சாதனைதான் எதிர்க்கட்சிகளுக்கு வேதனையை கொடுத்திருக்கிறது. எங்களது சாதனை 1,000 ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும். இனிவரும் நூற்றாண்டு இந்தியாவுக்கானது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமையான இந்தியாவைக்  கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அதேசமயம், பா.ஜ.க.விடம் என்ன கேள்வி கேட்க வேண்டும், எப்படிக் கேட்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியவில்லை. அதோடு, காங்கிரஸிடம் தெளிவான தேர்தல் வியூகம் இல்லை. மேலும், காங்கிரஸ் கட்சியில் தொலைநோக்கு சிந்தினை கொண்ட தலைவர்கள் இல்லை. கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உறக்கத்தில் இருந்தது. இந்தியாவின் எதிர்காலம் குறித்து காங்கிரஸிடம் எந்த திட்டமும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சிக்குக் கடின உழைப்பின் மீது நம்பிக்கை கிடையாது.

விமர்சனம் செய்வதில் மிகக்கீழான நிலையை எதிர்க்கட்சிகள் அடைந்திருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாகவே என்னை அவமானப்படுத்துவதுதான் எதிர்க்கட்சிகள் வேலையாக இருக்கிறது. என்னை அவதூறாகப் பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு டானிக் குடிப்பது போல் இருக்கிறது போலும். கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிகவும் மோசமாக விமர்சித்தன. எதிர்க்கட்சிகளின் வசவுகளை நான் வாழ்த்துக்களாக ஏற்றுக் கொள்கிறேன்.

மேலும், எதிர்க்கட்சிகள் யாரைத் திட்டுகிறார்களோ, அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து விடுவார்கள். அந்த வகையில், நான் 2024-ல் மீண்டும் பிரதமராவேன். அப்போது, என்னுடைய 3-வது ஆட்சி காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கும்” என்று கூறினார்.

Tags: Narendra ModiModiParliamentmodi parliament
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!

Next Post

ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது: பிரதமர் மோடி விமர்சனம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies