தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா… மாநிலங்களவையில் தாக்கல்!
Apr 29, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா… மாநிலங்களவையில் தாக்கல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைப்  பரிந்துரைக்கும் 3 பேர் அடங்கிய குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை, இதுவரை மத்திய அரசு பரிந்துரையின் பேரிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர்.  ஆனால், இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுதான் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைத்  தேர்வு செய்ய வேண்டும் என்று  கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. மேலும் அப்போது, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த விதிமுறையே தொடரும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக புதிய மசோதாவை  மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. இந்த மசோதாவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கவிட்டு, அதற்குப் பதிலாக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே 2024 பிப்ரவரி மாதம் ஓய்வு பெறுகிறார். இதனால், தேர்தல் ஆணையர் குழுவில் ஒரு காலியிடம் ஏற்படும். இந்த சூழலில், மேற்கண்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் புதிய தேர்தல் ஆணையரைப்  புதிய தேர்வுக்குழுவே தேர்வு செய்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும்.

Tags: commissionerbjpElection commissionCongressElection commissioner
ShareTweetSendShare
Previous Post

வீடு தேடி வருகிறது மத்திய அரசின் நலத்திட்டங்கள் : அண்ணாமலை

Next Post

சுதந்திர தின விழா பாதுகாப்பில் குளறுபடி: முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies