தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா… மாநிலங்களவையில் தாக்கல்!
Sep 14, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா… மாநிலங்களவையில் தாக்கல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 06:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைப்  பரிந்துரைக்கும் 3 பேர் அடங்கிய குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை, இதுவரை மத்திய அரசு பரிந்துரையின் பேரிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர்.  ஆனால், இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுதான் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைத்  தேர்வு செய்ய வேண்டும் என்று  கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. மேலும் அப்போது, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த விதிமுறையே தொடரும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக புதிய மசோதாவை  மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. இந்த மசோதாவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கவிட்டு, அதற்குப் பதிலாக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே 2024 பிப்ரவரி மாதம் ஓய்வு பெறுகிறார். இதனால், தேர்தல் ஆணையர் குழுவில் ஒரு காலியிடம் ஏற்படும். இந்த சூழலில், மேற்கண்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் புதிய தேர்தல் ஆணையரைப்  புதிய தேர்வுக்குழுவே தேர்வு செய்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும்.

Tags: bjpElection commissionCongressElection commissionercommissioner
Share
Tweet
SendShare
Previous Post

வீடு தேடி வருகிறது மத்திய அரசின் நலத்திட்டங்கள் : அண்ணாமலை

Next Post

சுதந்திர தின விழா பாதுகாப்பில் குளறுபடி: முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies