அமைச்சர் பொன்முடி வழக்கு: ஆகஸ்ட்  22ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
Feb 6, 2026, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் பொன்முடி வழக்கு: ஆகஸ்ட்  22ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கு  விசாரணை வருகின்ற ஆகஸ்ட்  22ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 17, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக கடந்த 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருக்கும் போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது பொன்முடி, கூடுதலாகக் கனிமவளத் துறைக்கும் அமைச்சராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர்  தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில்  அரசுக்கு 28  கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு  தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி, திமுக நிா்வாகிகள் கோதகுமாா், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

11 ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று  நடைபெற்றது. அப்போது சதானந்தன், கோத குமார், ஜெயச்சந்திரன், கோபி நாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி எம்.பி., ராஜ மகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. முதல் சாட்சியும், வழக்கின் புகார்தாரரும், முன்னாள் தாசில்தாரும் ஆன குமாரபாலன், உடல்நிலை சரியில்லாததால், சக்கர நாற்காலியில் வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் அவர் நீதிபதி முன்னிலையில் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற கௌதம சிகாமணி, ராஜ மகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை எனவே  வருகின்ற ஆகஸ்ட்  22ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags: PonmudiMinister PonmudiMP Gouthama SikhamaniGouthama Sikhamani
ShareTweetSendShare
Previous Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிக்கு டெண்டர்: மத்திய அரசு அறிவிப்பு

Next Post

“இந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது!”-உலகச் சுகாதார அமைப்பின் தலைவர்

Related News

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார்!

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நடுக்கடலில் மயக்கமடைந்த மீனவரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் – எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

பரவி வரும் பறவைக்காய்ச்சல், பொதுமக்களுக்கு கவனம் தேவை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை பிறப்பித்த அபாரதம் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திர திருவிழா கோலாகலம்!

இஸ்லாமாபாத்தை கைவிட்ட டிரம்ப் – இந்தியா – அமெரிக்கா டீலால் பெரும் பின்னடைவு!

மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

தொழில் போட்டி காரணமாக சேலத்தில் பானிபூரி விற்ற 14 வயது சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ஈரானில் போர் பதற்றம் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

தருமபுரியில் அடிப்படை வசதிகள் இன்றி அவசரகதியில் பேருந்து நிலையம் திறப்பு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

ஏற்காட்டை சூழ்ந்துள்ள கடும் பனிமூட்டம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies