சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் செய்யும் புற்றுநோய்  திமுக - அண்ணாமலை
Aug 15, 2025, 11:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் செய்யும் புற்றுநோய்  திமுக – அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 20, 2023, 07:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் திமுக கூட்டணியை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் முழுவதுமாகப் புறக்கணிப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

இன்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட பொதுமக்கள் சூழ இனிதே நிறைவுற்றது.

இங்கிருக்கும் சொரிமுத்து அய்யனார் கோவிலும், பூவன் பறையர் குறித்த கல்வெட்டும், தமிழகம் பிறப்பால் ஜாதி மத ஏற்றத் தாழ்வில்லாத பூமியாக விளங்கியது என்பதையும், பிறப்பால் பிரிவினை என்பது நம்மை ஆளவந்த அன்னியர்களால் உருவானது என்பதையும் எடுத்துக் கூறுகிறது.
அம்பாசமுத்திரம் வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகளுக்கு, 2021 ஆம் ஆண்டு, புவிசார் குறியீடு வழங்கியது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அரசு.

மோடியின் முகவரி: அம்பாசமுத்திரம்

ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற திருமதி டெய்சிராணி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பலனடைந்த வாழை நார் நிறுவனம் நடத்தும் சுமத்ரா தேவி, முத்ரா கடனுதவி மூலம் தொழில் முனைவோரான பழனியம்மாள், சுவநிதி திட்டத்தின் மூலம் பலனடைந்த தையல் கடை நடத்தும் சந்தனகுமாரி, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற திருமதி சிவகாமி. இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

கூலி உயர்வு கேட்டு அமைதியான முறையில் பேரணி நடத்திய மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி ஒன்றரை வயது குழந்தை உட்பட 17 பேர் கொல்லப்பட்ட போது, ஆட்சியில் இருந்தது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. கருணாநிதியின் கீழ்த்தரமான அரசியலை, இன்றைய சபாநாயகர் அப்பாவுவே… pic.twitter.com/WnRx5rPfcB

— K.Annamalai (@annamalai_k) August 19, 2023

கூலி உயர்வு கேட்டு அமைதியான முறையில் பேரணி நடத்திய மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி ஒன்றரை வயது குழந்தை உட்பட 17 பேர் கொல்லப்பட்ட போது, ஆட்சியில் இருந்தது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. கருணாநிதியின் கீழ்த்தரமான அரசியலை, இன்றைய சபாநாயகர் அப்பாவுவே விமர்சித்திருக்கிறார். சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் செய்யும் புற்றுநோய் தான் திமுக.

திருநெல்வேலியில் சித்தா பல்கலைக்கழகம் அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது அதை சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். நீதிமன்றம், “ஏன் மாற்றுகிறீர்கள்” என்று கேட்ட பிறகுதான் உண்மை வெளிவருகிறது. கச்சத்தீவையும் தாரைவார்த்து, தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், டாஸ்மாக் கடைகளையும் திறந்து வைத்து பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது இந்த ஊழல் திமுக அரசு. இதில் தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட தமிழினத் தலைவர் என்ற பட்டம் வேறு.

தொடர்ந்து, வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் திமுக கூட்டணியை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் முழுவதுமாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியை மூன்றாவது முறையாக மீண்டும் தொடரச் செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

9 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது- அமித்ஷா பெருமிதம்

Next Post

மணிப்பூர் திரும்பிய 212 மெய்டி சமூகத்தினர்- முதல்வர் பைரோன் சிங் ராணுவத்திற்கு பாராட்டு

Related News

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies