ஆகஸ்ட் 28-ல் 45-வது “ரோஜ்கர் மேளா”: 57,000 பேருக்கு பணி ஆணை!
May 7, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆகஸ்ட் 28-ல் 45-வது “ரோஜ்கர் மேளா”: 57,000 பேருக்கு பணி ஆணை!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப்பில் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் 45-வது ரோஜ்கர் மேளாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 57,000 பேருக்கு பணி ஆணைகள் வழங்குகிறார்.

10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் “ரோஜ்கர் மேளா” எனப்படும் வேலைவாய்ப்புத் திருவிழாவை கடந்தாண்டு அக்டோபர் 22-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த வேலைவாய்ப்பு திருவிழாவின் மூலம், மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்கள் வருவாய்த்துறை, நிதி சேவைகள் துறை, அஞ்சல் துறை, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத்துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இந்த ரோஜ்கர் மேளா நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 44 இடங்களில் நடந்திருக்கிறது. இவற்றின் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 28-ம் தேதி 45-வது ரோஜ்கர் மேளா பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், 57,000 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்படவிருக்கிறது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்துகொண்டு, வேலைவாய்ப்பு ஆணைகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றுகிறார்.

Tags: PM Modicentral government jobs
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாப் அரசைக் கலைக்க பரிந்துரை செய்வேன் – ஆளுநர் எச்சரிக்கை!

Next Post

சந்திரயான்-3: ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பாராட்டு!

Related News

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை – பிரதமர் மோடி புகழாரம்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை – திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

தவெக தனிப்பெரும்பான்மை குறித்து பேச ஆளுநருக்கு உரிமை உள்ளது – இன்பதுரை

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies