பதிரான பந்து வீச்சில் திணறிய வங்காளதேசம்!
Jun 23, 2026, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதிரான பந்து வீச்சில் திணறிய வங்காளதேசம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 31, 2023, 08:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியக் கோப்பை தொடரின் 2வது போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற 165 ரன்களை தேவைபடுகிறது.

ஆசியக் கோப்பைத் தொடரின் இரண்டாவது போட்டியில் வங்கதேசம் – இலங்கை அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த மைதானமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், பெரிய ஸ்கோர் அடிக்கப்படும் என்று ரசிகர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இலங்கை அணி வானிலையைக் கணித்து 2வது ஓவரிலேயே ஸ்பின்னரை கொண்டு வந்தது. தீக்சனா வீசிய 2வது ஓவரிலேயே அறிமுக வீரர் ஹசன் டக் அவுட்டாகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் முகமது நைம் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷாண்டோ – ஷகிப் அல் ஹசன் கூட்டணி இணைந்தது. ஷகிப் அல் ஹசனின் வருகைக்காக காத்திருந்த இலங்கை அணி, உடனடியாகப் பதிரானாவைக் கொண்டு வந்தது.

புதிரான பந்து வீசிய அந்த ஓவரின் 4வது பந்திலேயே ஷகிப் அல் ஹசன் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த ஹிருடாய் – ஷாண்டோ இணை சிறிது நேரம் போராடியது. 4வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில், கேப்டன் ஷனகா பந்தில் ஹிருடாய் 20 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து வந்த அனுபவ வீரர் ரஹீம் பதிரானா பந்தில் 13 ரன்களில் ஆட்டமிழக்க, இன்னொரு முனையில் நின்று போராடிய ஷாண்டோ அரைசதம் அடித்தார். பிறகு களமிறங்கிய மெஹதி ஹசன் மிராஸ் 5 ரன்களிலும், மெஹதி ஹசன் 6 ரன்களிலும் டஸ்கின் அஹ்மது டக் அவுட்டிலும் ஆட்டமிழந்தனர்.

161 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் விளையாடிய நிலையில், பதிரானாவின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டாகியது. இறுதியாக வங்கதேசம் அணி 42.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக வங்கதேசம் அணியின் ஷாண்டோ 89 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் பதிரானா 4 விக்கெட்டுகளையும், தீக்சனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Tags: asian cup cricketbangladesh cricketsrilanka cricket
ShareTweetSendShare
Previous Post

எக்ஸில் வரவிருக்கும் புதிய அப்டேட்!

Next Post

பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை புதிய உத்தரவு

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies