பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!
Apr 29, 2026, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

மனிதாபிமான உதவிகளை செய்வதாக உத்தரவாதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 09:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஸாவில் உள்ள அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் உயிரிழந்த பொதுமக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸை தொடர்புகொண்டு, மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்.

இஸ்ரேல்-காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இப்போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் சுமார் 500 பேர் வரை உயிரிழந்திருப்பதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருப்பதோடு, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பாலஸ்தீன அதிபர் முஹமது அப்பாஸுடன் பேசினேன். காஸா அல் அஹ்லி மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். மேலும், பாலஸ்தீன மக்களுக்காக மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புகிறோம் என்று உறுதியளித்தேன்.

இது தவிர, காஸா எல்லையில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையையும் பகிர்ந்து கொண்டேன். அதேபோல, இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, தனது வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி, “பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் பிராந்தியத்தில் மனிதாபிமான நிலைமை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தைக் கடுமையாக கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துவோம்.

இஸ்ரேல் மீதான கொடூரமான தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டித்துள்ளோம். தீவிரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதில் சர்வதேச சமூகம் ஒன்றாக நிற்க வேண்டும். பாலஸ்தீன விவகாரத்தில், இரு நாடுகளின் தீர்வுக்கான நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது” என்றார்.

காஸா மருத்துவமனையில் நேற்று தாக்குதல் நடந்த பிறகு, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காஸாவிலுள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் துயரமான இழப்பு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது இதயப்பூர்வமான இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நடக்கும் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகள் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கவலைக்குரிய விஷயமாகும். இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Spoke to the President of the Palestinian Authority H.E. Mahmoud Abbas. Conveyed my condolences at the loss of civilian lives at the Al Ahli Hospital in Gaza. We will continue to send humanitarian assistance for the Palestinian people. Shared our deep concern at the terrorism,…

— Narendra Modi (@narendramodi) October 19, 2023

 

Tags: PalestinianMahmoud AbbasPM ModiPresident
ShareTweetSendShare
Previous Post

தூங்கிக் கொண்டிருக்கும் திமுகவை எழுப்புவதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டம்! – கரு நாகராஜன்.

Next Post

முதுமை மற்றும் நோயை காரணம் காட்டி வயதான பெற்றோரை பிரிக்க முடியாது!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies