20 ஹிஸ்புல்லா நிலைகளையும் அழித்த இஸ்ரேல் இராணுவம்!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

20 ஹிஸ்புல்லா நிலைகளையும் அழித்த இஸ்ரேல் இராணுவம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 07:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒருபுறம் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் 20 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். முதலில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர்கள், பின்னர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதலில் ஈட்பட்டதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காஸா மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,400-க்கும் மேற்பட்டோரும், காஸாவில் 4,500-க்கும் மேற்பட்டோரும் பலியாகி இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நாள் முதல் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். வடக்குப் பகுதியில் இருந்து காஸா நகரை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஹமாஸ் மீதான தாக்குதலைத் தடுக்கும் நோக்கில், தெற்குப் பகுதியில் இருந்து லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அதேசமயம், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்போது ஹிஸ்புல்லா அமைப்பு போரில் முழுமையாக ஈடுபடுமா என்பதை என்னால் கணிக்க முடியாது. ஒருவேளை ஹிஸ்புல்லா அப்படியொரு முடிவை எடுத்தால், அது வருத்தப்படும். நினைத்துக்கூட பார்க்க முடியாத சக்தியுடன் ஹிஸ்புல்லா அமைப்பை தாக்குவோம். அது ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் அரசுக்கு அழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்திருந்தார்.

ஆனாலும், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் திருந்தவில்லை. தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். விளைவு, ஹிஸ்புல்லா இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்கத் தொடங்கியது. அந்த வகையில், ஹிஸ்புல்லா அமைப்பின் 20 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இத்தகவலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அதேபோல, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ் கூறுகையில், “ஹிஸ்புல்லா மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடி பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் லெபனானை போருக்கு இழுத்து வரும் வகையில் ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது. எல்லைக் கோட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஹிஸ்புல்லாவின் பல்வேறு உட்கட்டமைப்புகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்திருக்கிறது” என்றார்.

Tags: Israeleliminatedhezbollah cells
Share
Tweet
SendShare
Previous Post

ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு !

Next Post

பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்திற்கு விருது!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies