20 ஹிஸ்புல்லா நிலைகளையும் அழித்த இஸ்ரேல் இராணுவம்!
Jul 31, 2026, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

20 ஹிஸ்புல்லா நிலைகளையும் அழித்த இஸ்ரேல் இராணுவம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒருபுறம் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் 20 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். முதலில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர்கள், பின்னர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதலில் ஈட்பட்டதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காஸா மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,400-க்கும் மேற்பட்டோரும், காஸாவில் 4,500-க்கும் மேற்பட்டோரும் பலியாகி இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நாள் முதல் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். வடக்குப் பகுதியில் இருந்து காஸா நகரை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஹமாஸ் மீதான தாக்குதலைத் தடுக்கும் நோக்கில், தெற்குப் பகுதியில் இருந்து லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அதேசமயம், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்போது ஹிஸ்புல்லா அமைப்பு போரில் முழுமையாக ஈடுபடுமா என்பதை என்னால் கணிக்க முடியாது. ஒருவேளை ஹிஸ்புல்லா அப்படியொரு முடிவை எடுத்தால், அது வருத்தப்படும். நினைத்துக்கூட பார்க்க முடியாத சக்தியுடன் ஹிஸ்புல்லா அமைப்பை தாக்குவோம். அது ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் அரசுக்கு அழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்திருந்தார்.

ஆனாலும், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் திருந்தவில்லை. தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். விளைவு, ஹிஸ்புல்லா இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்கத் தொடங்கியது. அந்த வகையில், ஹிஸ்புல்லா அமைப்பின் 20 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இத்தகவலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அதேபோல, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ் கூறுகையில், “ஹிஸ்புல்லா மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடி பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் லெபனானை போருக்கு இழுத்து வரும் வகையில் ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது. எல்லைக் கோட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஹிஸ்புல்லாவின் பல்வேறு உட்கட்டமைப்புகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்திருக்கிறது” என்றார்.

Tags: Israeleliminatedhezbollah cells
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு !

Next Post

பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்திற்கு விருது!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies