ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான்: பிரான்ஸ் அதிபர்!
May 9, 2026, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான்: பிரான்ஸ் அதிபர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 07:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தாக்குதலில் 30 பிரெஞ்ச் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கூறியிருக்கிறார்.

இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 18 நாட்களாகப் போர் நடந்து வருகிறது. இப்போர் தொடங்கிய பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மற்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே ஆகியோர் இஸ்ரேலுக்குச் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்து விட்டு வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரான், இன்று இஸ்ரேலுக்குச் சென்று, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஹமாஸ் இஸ்ரேல் மீது தொடுத்தது 2001 செப்டம்பர் 11-ம் தேதிக்குப் பிறகு உலகம் அறிந்த மிக மோசமான தீவிரவாதத் தாக்குதலாகும். இது யூத விரோத வன்முறையின் உச்சமாகும். நடந்த அனைத்து பயங்கரங்களையும் விவரிக்க இயலாது.

ஆனால், அன்னே ஃபிராங்கைப் போலவே, இந்த யூதக் குழந்தைகளும் மேற்கண்ட அரக்கர்களிடமிருந்து தப்பிக்க அறைகளில் ஒளிந்து கொண்டனர். ஆனாலும், அவர்களை கண்டுபிடித்து வெட்டிக் கொன்றனர். மேலும், பாபி யாரைப் போலவே, யூதர்களும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்குக் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தீவிரவாதிகள், குழந்தைகளை உயிருடன் எரித்தார்கள். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.

மேலும், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றிருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனத்திற்கும் நாகரீகத்திற்கும் இடையிலான போரில் நாங்கள் இருக்கிறோம். ஹமாஸின் நடவடிக்கைகள் யூதர்களுக்கு மட்டுமின்றி மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் முழுவதுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஹமாஸ் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்.

காஸா நகரில் ஹமாஸின் உட்கட்டமைப்பு, அரசியல் பின்புலம் உட்பட அனைத்தையும் அழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதிபூண்டுள்ளோம். அதேபோல, பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றவர்களையும் மீட்போம். அதேசமயம், பாலஸ்தீனிய மக்களுக்கு தீங்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம். இஸ்ரேல் இராணுவம் நிச்சயம் ஹமாஸை அழித்துவிடும். போர் முடிந்ததும் யாரும் ஹமாஸின் கொடுங்கோன்மையின் கீழ் வாழ வேண்டியதில்லை” என்று கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், “இஸ்ரேல்-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி. மேலும், இஸ்ரேலுக்கு பிரான்ஸ் என்றும் உறுதுணையாக இருக்கும். அதேபோல, ஹமாஸ் தாக்குதலில் 30 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே, ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான்” என்று கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் பிரதமரை சந்தித்துப் பேசிய மெக்ரான், பின்னர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு இஸ்ரேல் பிரஜைகளின் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்துப் பேசுவதற்காக அந்நாட்டுக்குச் சென்றார். இதன் மூலம், போருக்கு மத்தியில் பாலஸ்தீனிய அதிபரின் மாளிகைக்குச் செல்லும் முதல் உலகத் தலைவர் மெக்ரான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: FrancePresidentIsraelImmanual macron
ShareTweetSendShare
Previous Post

அதிரடியாக பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா !

Next Post

தமிழக அரசின் அலட்சியம்: சுற்றுலாப் பயணிகள் அவதி

Related News

உடல்நலக்குறைவால் வேதாந்தம் ஜி மருத்துவமனையில் அனுமதி – நேரில் நலம் விசாரித்தார் மோகன் பாகவத்!

மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆடசி – முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி!

தலைமை தாங்கும் தமிழர் – முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமனம்!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies