பெண்களை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி விமர்சனம்!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 02:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போலியான புகார்கள் கொடுத்திருப்பதாகக் கூறி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு பெண்களை அவமதித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அதேசமயம், இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

ஆகவே, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன. இதற்காக, இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று ராஜஸ்தான் மாநிலம் பாலியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பா.ஜ.க. ஆட்சி நடக்கும் ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் 97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அதிக விலைக்கு பெட்ரோல் விற்கிறது.

ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை மறு ஆய்வு செய்யப்படும் என்று நான் உத்தரவாதம் தருகிறேன். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நிம்மதியை அளிக்கும். காங்கிரஸ் அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தானை முதலிடம் பிடிக்கச் செய்திருக்கிறது.

அதோடு, பெண்கள் அளித்த புகார்கள் போலியானவை என்று முதல்வர் கூறுகிறார். நம் நாட்டில் ஒரு பெண் பொய் வழக்கு போடுவது எப்போதாவது நடக்குமா? முதல்வர் என்ன செய்ய வேண்டும், விசாரணை நடந்து வருகிறது என்று சொல்ல வேண்டும். அதைவிடுத்து பதிவான வழக்குகள் போலியானவை என்றால் என்ன அர்த்தம். இது பெண்களை அவமதிக்கும் செயல் இல்லையா?

மேலும், எங்கெல்லாம் பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் ஆட்சி நடக்கிறதோ, அங்கெல்லாம் மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் வேகமாக செயல்படுத்தப்படுகிறது. அதோடு, அத்திட்டங்களில் பா.ஜ.க.வின் மாநில அரசுகள் கூடுதலாக ஏதாவது சேர்க்கின்றன. உதாரணமாக, எங்கெல்லாம் பா.ஜ.க. அரசு நடக்கிறதோ, அங்கெல்லாம் பிரதமர் கிசான் சம்மன் நிதி 6,000 ரூபாயுடன், பா.ஜ.க. மாநில அரசுகள் தங்கள் தரப்பில் இருந்து கூடுதலாக 6,000 ரூபாய் தருகின்றன.

ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, இம்மாநில விவசாயிகளுக்கும் கூடுதலாக 6,000 ரூபாய் கிடைக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். இன்று நாம் வளர்ந்த நாடாக மாற கடுமையாக உழைத்து வருகிறோம்.

இதற்கு ராஜஸ்தானில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் அரசு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் மற்றும் குடும்ப அரசியலைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. சமாதான அரசியலைத் தவிர வேறு எதையும் இக்கட்சி நினைக்கவில்லை” என்றார்.

Tags: PM ModiElectionRajasthanCompaign
Share
Tweet
SendShare
Previous Post

நிரம்பி வழியும் வரதமாநதி அணை – விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம் – அண்ணாமலை கண்டனம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies