முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
முன்னாள் பிரதமரும், பாஜக முன்னாள் தலைவருமான வாஜ்பாய் கடந்த 1924 டிசம்பர் 25ஆம் தேதி குவாலியரில் பிறந்தவர். 1939ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் இணைந்த வாஜ்பாய், 1947 ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ முழுநேர ஊழியர் ஆனார். பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவர் என்று பெருமையும் அவருக்கு உண்டு.
வாஜ்பாய் சுமார் 50 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி எனக 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் வாஜ்பாய் பணியாற்றியுள்ளார்.
1996ம் ஆண்டு 13 நாட்களும், பின்னர் 1998 முதல் 1999 வரையிலான 13 மாதங்களுக்கும், அதைத் தொடர்ந்து 1999 முதல் 2004 வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமான 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி மறைந்தார். இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருதினை, 2015ஆம் ஆண்ட இந்தியக் குடியரசுத் தலைவரும் மற்றும் இந்தியப் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று வழங்கி கௌரவித்தனர்.