பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: தேர்தலில் இந்து பெண் போட்டி!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: தேர்தலில் இந்து பெண் போட்டி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 26, 2023, 06:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக, நாடாளுமன்றத் தேர்தலில் இந்து பெண்ணான டாக்டர் சவீரா பிரகாஷ் போட்டியிடுகிறார்.

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த அரசின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியுடன் நிறைவடையவிருந்தது.

ஆனால், 3 நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 9-ம் தேதியே ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார். இதையடுத்து, வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 10 தொகுதிகளில் பிற மதத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக இந்து பெண் ஒருவர் போட்டியிடுகிறார். கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பனெர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சவீரா பிரகாஷ் என்ற இந்து பெண் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

பொதுத் தொகுதிகளில் 5 சதவீத பெண் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, பிகே 25 என்ற பொதுத் தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட சவீரா பிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

சவீரா கடந்த 2022-ம் ஆண்டு அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றவர். தனது படிப்பை முடித்த கையோடு அரசியல் களத்தில் நுழைந்திருக்கிறார். சவீராவின் தந்தை ஓம் பிரகாஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியில் கடந்த 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறார். இவரும் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சவீரா கூறுகையில், “பாகிஸ்தான் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க விரும்புகிறேன். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஒழிப்பதே முதல் முன்னுரிமை. எனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அரசியல் பணிகளை மேற்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: pakistanParliamentElectionHindu lady
Share
Tweet
SendShare
Previous Post

ஜானகி நூற்றாண்டு விழா… அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம்: புருவம் உயர்த்தும் அரசியல் புள்ளிகள்!

Next Post

இம்பால் போர்க் கப்பலின் பெயர்க் காரணத்தைக் கூறிய கடற்படை தலைவர் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies