பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மீண்டும் கேட்க ஆவலுடன் உள்ளோம் : அண்ணாமலை
Jul 31, 2026, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மீண்டும் கேட்க ஆவலுடன் உள்ளோம் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,  மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

இன்றைய தினம், பாரதப் பிரதமர் மோடி.நாட்டு மக்களுடன் வானொலி மூலம் நேரடியாக உரையாடும் #MannKiBaat 110 ஆவது நிகழ்ச்சியில், வரும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பெண்கள் முன்னேற்றம் குறித்தும், சமுதாயத்தில் பெண்களின் முக்கியப் பங்கு குறித்தும் பேசிய  பிரதமர், “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், உலகம் அறிவில் ஓங்கித் தழைக்கும்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசியது பெருமையளிக்கிறது.

மேலும், அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்துள்ள பெண்கள், தற்போது  விவசாயத்திலும் சிறந்து விளங்க, ஆளில்லா சிறு விமானங்களை வழங்கி, அவற்றின் மூலம், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப் பயிற்சியும், உதவிகளும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கும் திட்டம், இனி விவசாயத்திலும் பெண்களின் இன்றியமையாத பங்கினை வெளிப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மார்ச் 3 அன்று, உலக வனவிலங்குகள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து, வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் நமது நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், மத்திய அரசின் முயற்சிகளால், இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும், வனவிலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி, வனவியல் பாதுகாப்பில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முதன்முறை வாக்காளர்களான இளைஞர்களின் வாக்குகள், ஜனநாயகத்துக்கு எத்தனை முக்கியம் என்பதை விளக்கி, அனைவரையும் தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரும் மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadj bjp presidentPM ModiannamalaiMannKiBaat 110
ShareTweetSendShare
Previous Post

ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்!

Next Post

மக்களவை தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள் : முதல்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies