கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!
Jun 23, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Mar 18, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் பிரதமர் மோடி சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணியில் சென்றார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1ம் தேதி வாக்கு பதிவு முடிவடைகின்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 4ம் தேதி அந்த வாக்குகள் எனப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் இந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவில் முதல் கட்டத்தில் தமிழகத்திற்கு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தியாவின் வடபகுதிகளில் பெரும் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்திருக்கும் பாஜக, தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிகளில் தங்களுடைய பலத்தை அதிகரிக்க, பல யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக பிரதமர் மோடி  தமிழகத்திற்கு இந்த வருடத்தில் ஏற்கனவே பலமுறை மக்களை  சந்தித்துள்ளார். இந்நிலையில் கோவையில் நடைபெறும் ரோட் ஷோ ஒன்றில் பங்கேற்க கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தார்.

பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணியில் சென்றார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடியுடன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமர் மோடி வாகனத்தில் இருந்தபடியே மக்களுக்கு கையசைத்து தனது வணக்கங்கள் தெரிவித்தார்.  சுமார் இரண்டரை கி.மீட்டர் தூரம் பிரதமர் மோடி திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடியே சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் மக்களைச் சந்தித்தார்.

நாதஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் கலை குழுவினரால் நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்ட தோடர் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சாலையின் இருபுறங்களிலும் நின்று மோடியை பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். அவரும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தவாறு கை அசைத்தபடி வாகனத்தில் சென்றார்.

பேரணி இறுதியில் 1998 கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Tags: PM Modikovai
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர், மேகாலயாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

Next Post

பாஜகவுடன் பாமக கூட்டணி!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies