அதிமுக நிர்வாகி வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி: பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!
Jul 29, 2026, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக நிர்வாகி வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி: பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி, ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம், அதிக எண்ணிக்கையில் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும், அரசியல் பிரமுகர்கள் தொடர்புடைய இடங்களில், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில், சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்ன் பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எட்டரை பகுதிக்கு சென்று உள்ளனர்.

இதனை அடுத்து, எட்டரை பஞ்சாயத்து தலைவர் திவ்யா அன்பரசன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு கோடி ரூபாய் பணம் சிக்கியது.

இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.  இதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு கோடி ரூபாய் பணத்தை வீட்டில் எதற்காக வைத்திருந்தார்கள்? வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்தார்களா?  உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்பரசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதைத் தெரிந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள், அவருடைய வீட்டின் முன்பு கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

Tags: trichyaiadmkFlying Squad
ShareTweetSendShare
Previous Post

ஈரான், இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் பதற்றம் : இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

Next Post

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசம் வரும் – அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies