“சீக்கியர்களுக்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்” என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லி துவாரகா தொகுதியில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னாக நடைபெற்ற பிரமாண்ட வாகனப் பேரணியில் மோடி கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
மக்கள் வெள்ளமென திரண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, “காங்கிரஸ் கட்சியால் டெல்லியில் சீக்கிய சகோதர, சகோதரிகள் பட்ட கஷ்டங்களை மறக்க முடியாது” எனவும், “அவர்களது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியவர்களை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது” எனவும் கூறினா.
“இதை எல்லாம் மறந்துவிட்டு, வாக்கு வங்கிக்காக சிலர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்” என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும், ST, SC மற்றும் OBC -களின் இளம் தலைமுறை அழிந்துவிட்டது” என்று வேதனையை வெளிப்படுத்தினார்.