பன்னுான் கொலை சதி அமெரிக்காவுக்கு நிகில் குப்தா நாடு கடத்தல்!
Aug 11, 2026, 03:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பன்னுான் கொலை சதி அமெரிக்காவுக்கு நிகில் குப்தா நாடு கடத்தல்!

Murugesan M by Murugesan M
Jun 18, 2024, 08:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலிஸ்தான் ஆதரவு சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்ய சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தாவை , அமெரிக்காவுக்கு செக் குடியரசு நாடு கடத்தியுள்ளது.
அது பற்றிய ஒரு செய்து தொகுப்பு.

இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ள ‘சீக்கியருக்கான நீதி’ என்ற காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து பிரிந்து சீக்கியர்களுக்கான தனிநாடு காலிஸ்தான் அமையவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் இந்த தீவிரவாத அமைப்பின் தலைவராக, குர்பத்வந்த் சிங் பன்னூன் இருந்து வருகிறார்.

அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை வைத்துள்ள இவர், தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கும் இந்தியாவுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்.

இந்திய அரசால் தீவிரவாதி என்று அறிவிக்கப் பட்டுள்ள குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், இந்தியாவைச் சேர்ந்த 52 வயதான நிகில் குப்தா மீது அமெரிக்க நீதித் துறை குற்றம்சாட்டி இருந்தது.

இந்திய அரசு அதிகாரி ஒருவருடன் இணைந்து நிகில் குப்தா இந்த சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க வழக்கறிஞர்களால் குற்றம் சாட்டப் பட்டுள்ள இவர், 2023 ஆம் ஆண்டு செக் குடியரசால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள பராக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அமெரிக்காவுக்கு நாடு கடத்தப் படுவதற்கு தடை கேட்டு , நிகில் குப்தா , ஐரோப்பிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப் பட்டநிலையில், அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவற்காக , செக் குடியரசு நிகில் குப்தாவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தி யுள்ளது. இந்த செய்தியை federal bureau of prisons இணைய தளம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க நீதித்துறை கருத்து தெரிவிக்காத நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த குப்தாவின் வழக்கறிஞர் ஜெஃப்ரி சாப்ரோவும் கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னதாக, கடந்த ஆண்டு, கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு ஈடுபட்டதாக கனடா நாடாளுமன்றத்திலேயே குற்றஞ்சாட்டினார். இந்திய அரசு அதற்கு உடனடியாக கடுமையான மறுப்பு தெரிவித்தது.

அடுத்து, பன்னுனைக் கொல்ல இந்திய அரசு அதிகாரியுடன் சேர்ந்து நிகில் குப்தா சதித்திட்டத்தைத் திட்டியதாக, அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டிய உடனேயே, இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, முறைப்படி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தது.

தொடர்ந்து, பன்னூன் கொலை செய்ய தீட்டிய சதி வழக்கில், இந்தியாவின் விசாரணை திருப்தி அளிப்பதாக வெளிப்படையாக அமெரிக்க அரசு தெரிவித்தது.

இதற்கிடையே, பிறநாடுகளில் இருந்தபடி, இந்தியாவுக்கு எதிரான சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தீவிரவாத செயற்பாடுகள் குறித்து இந்தியா தொடர்ந்து சர்வதேச அரங்கில் கேள்வி எழுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Nikhil Gupta extradited to USA for Bannuan murder conspiracy!
Share
Tweet
SendShare
Previous Post

ஈபிள் டவரையும் மிஞ்சிய உயரத்தில் செனாப் பாலம் இந்தியா சாதனை!

Next Post

இளம்மாஸ்டர் டைவர் சாதனை படைத்த பெங்களூரு நீர்க்குழந்தை!

Related News

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அமைச்சர் ரமேஷ் பதிலடி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்க தடை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தனித் தீர்மானம் – அனைத்துக்கட்சி ஆதரவுடன் நிறைவேறியது!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து – 3 பேர் காயம்!

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

காவிரியில் நீர் திறப்பு தொடர்பான தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை!

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies