ஜூலை 8 முதல் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு!
Aug 7, 2026, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை 8 முதல் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு!

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராணுவத் தலைமையக ஒதுக்கீட்டின் கீழ் ராணுவ வீரர்களின் குழந்தைகள் அக்னிபத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான நிகழ்வு ஏஓசி மையத்தில் நடைபெறுகிறது.

இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் விமானப்படை, தரைப்படை, கப்பல் படை ஆகியவற்றில் பணியாற்ற ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படைகளில் பணியாற்றுவர்.

இந்நிலையில் ராணுவத் தலைமையக ஒதுக்கீட்டின் கீழ் ராணுவ வீரர்களின் குழந்தைகள் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான நிகழ்வு செகந்திராபாதில் உள்ள ராணுவத் தளவாடங்கள் மற்றும் பிற பொருட்களை விநியோகிக்கும் ஏஓசி அமைப்பின் தாப்பர் மைதானத்தில் ஜூலை 8 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறவுள்ளது.

அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் அலுவலக உதவியாளர், 10-ம் வகுப்பு படித்துள்ள சமையல் கலைஞர், பல்வேறு துறை பணியாளர்கள், சலவைத் தொழிலாளி, 8-ம் வகுப்பு வரை படித்துள்ள பராமரிப்பு பணியாளர், சிறந்த விளையாட்டு வீரர் (பொதுப்பிரிவு) ஆகியோர் அக்னிவீர் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.

விளையாட்டு வீரரின் திறனை சோதிப்பதற்காக  விளையாட்டு வீரர்கள் தாப்பர்  மைதானத்திற்கு ஜூலை 5 அன்று காலை 6 மணிக்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஓட்டப்பந்தயம், நீச்சல், பளு தூக்குதல் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது சான்றிதழ்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்த சான்றிதழ் இரண்டு ஆண்டு காலத்திற்கு முந்தையாக இருக்கக் கூடாது. அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் அலுவலக உதவியாளர், 10-ம் வகுப்பு படித்துள்ள சமையல் கலைஞர், பல்வேறு துறை பணியாளர்கள், சலவைத் தொழிலாளி, 8-ம் வகுப்பு வரை படித்துள்ள பராமரிப்பு பணியாளர்களுக்கான வயது வரம்பு பதினேழரை வயது முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆட்சேர்ப்புக் குறித்த தகவல்களை  www.joinindianarmy[at]nic[dot]in  என்ற இணையதளத்தில் காணலாம். ஆட்சேர்ப்பு நிகழ்வு எந்தவிதக் காரணமும் இன்றி எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags: Agniveer Program Recruitment from 8th July!
Share
Tweet
SendShare
Previous Post

தேசவிரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும்!- எல்.முருகன்

Next Post

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது! : ஹர்தீப் எஸ் பூரி

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies