கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!
Jul 1, 2025, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 28, 2024, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல கடந்த 2023-24ஆம் ஆண்டில் கரும்பு விநியோகித்த விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் அறிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு செய்திக்குறிப்பும் வெளியிட்டதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

ஆனால் திமுக ஆட்சியை பிடித்து 41 மாதங்கள் கடந்த நிலையில் , இன்று வரை இந்த தொகையானது விவசாயிகளுக்கு வழங்க எந்த விதமான நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி உள்ளார்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் ஊக்கத்தொகை இன்றி விவசாயிகள் பண்டிகையை கொண்டாட முடியாமல் வேதனையில் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

எனவே கரும்பு விவசாயிகளுக்கான ஆதார விலையையும், சிறப்பு ஊக்கத்தொகையையும் உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Tags: sugaca cane priceepsEdappadi Palaniswamiamil Nadu governmentsugarcane
ShareTweetSendShare
Previous Post

இரு நாட்களில் குரூப்-4 தேர்வு முடிவு வெளியாகலாம் என தகவல்!

Next Post

சாலையில் அலட்சியமாக கொட்டப்பட்ட கற்கள் – விபத்தில் ஒருவர் உயிரிழந்த சோகம்!

Related News

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Load More

அண்மைச் செய்திகள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies